காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை : துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் வீரமரணம்
Aug 12 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் Pulwama மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். என்கவுன்டர் தளத்தில் இருந்து ஒரு ஏ.கே-47 துப்பாக்கி, கையெறி குண்டுகள், மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குப்வாரா மாவட்டத்தின் லால்போரா பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சந்தேகத்துக்குரிய 3 பேரை, பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். மேலும், அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ள் பறிமுதல் செய்யப்பட்டன.