புதிய தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் - உடல் ஆரோகியத்தை பராமரிக்க ஒவ்வொருவருக்கும் தனி இணையதள முகவரி உருவாக்கப்படும் என அறிவிப்பு
Aug 15 2020 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தினத்தையொட்டி, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.
புதிய தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின்படி, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், சுகாதார ID உருவாக்கப்படும் என பிரதமர் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். கொரோனா வைரஸ், உடல்நலம் நலம் தொடர்பான தன்னம்பிக்கையை சிந்திக்க தூண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு ஆய்வகத்தில் 300 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தற்போது நாளோன்றுக்கு 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் இந்தியாவின் சுகாதார அமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட அவர், குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது விவரங்கள் அடங்கிய பிரத்யேக சுகாதார ID வழங்கப்படும் என்றும் எந்த நோய் பாதிப்பு, மருத்துவர் ஆலோசனை, உட்கொண்ட மருந்து உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் சேகரிக்கப்படும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி சுதந்திர தின விழா உரையில் தெரிவித்தார்.