74 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோதி
Aug 15 2020 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியினை பிரதமர் திரு. நரேந்திர மோதி ஏற்றினார்.
74-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்ற கட்டிடம், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் திரு.மோதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு சென்ற அவர், 7வது முறையாக தேசிய கொடியை அவர் ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.