இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 36-ஆக அதிகரிப்பு - ஒரே நாளில் 996 பேர் உயிரிழப்பு
Aug 15 2020 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 65 ஆயிரத்து 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை, 18 லட்சத்து 8 ஆயிரத்து 937 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 996பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 36 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.