குளிர் காலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி, முன்பை விட அதிவேகமாக பரவும் - சுகாதார வல்லுனர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Sep 21 2020 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குளிர் காலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி, முன்பை விட அதிவேகமாக பரவும் வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுனர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகையை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தற்போது குளிர் காலம் நெருங்கும் நிலையில், வெப்பநிலை குறைந்து வருவதால், முன்பை விட மின்னல் வேகத்தில், அதிகளவில், கொரோனா பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார வல்லுனர்கள் அஞ்சுகின்றனர். இது ஏற்கெனவே பரவியதை விட, மோசமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள், மனித பரிசோதனை கட்டங்களில் உள்ளதாகவும், நல்ல முன்னேற்றங்களைக் காண முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், அக்டோபர் மாதத்தில் கொரோனா பரவல் 70 லட்சத்தை தாண்டக்கூடும் என ஏற்கனவே ஓர் ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.