காஷ்மீரின், கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் இருதரப்பு எல்லைப் பிரச்னை - இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை
Sep 21 2020 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரின், கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில், முதன்முறையாக மத்திய அரசு அதிகாரி ஒருவரும் பங்கேற்க உள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில், 3 மாதங்களுக்கும் மேல் இந்திய - சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக ராணுவ மற்றும ராஜாங்க ரீதியில், இரு நாடுகளுக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், சீனா தொடர்ந்து அத்துமீறல்கள் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று, இந்தியா - சீனா ராணுவ கமாண்டர் அளவிலான ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை, சுஷுல் - மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா தரப்பில், லெஃப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்கும் நிலையில், முதன்முறையாக மத்திய அரசு சார்பில், வெளியுறவுத் துறை இணை செயலாளர் திரு. நவின் ஸ்ரீவஸ்தவா பங்கேற்க உள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதியை மீட்பது; துருப்புக்களை பின்வாங்குவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.