இந்திய கடற்படை போர்க்கப்பலில் முன்களப்போராளிகள் - முதல்முறையாக பெண் அதிகாரிகள் இருவர் நியமனம்
Sep 21 2020 7:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் முன்களப்போராளிகளாக, முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையின் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், போர்க்கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் முதல்முதலாக, போர்க்கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர், கடற்படை போர்க்கப்பல்களில் முன்களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் இருவரும் 60 மணிநேர பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது எனவும், பெண் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்திய விமானப்படையில் ரஃபேல் போர்விமானத்தின் விமானியாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், போர்க்கப்பலிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.