இந்தியாவில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 14 லட்சத்து 92 ஆயிரத்து 409 கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
Sep 25 2020 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இதுவரை இல்லாத அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 14 லட்சத்து 92 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா 2-ம் இடத்திலும், தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 6 கோடியே 89 லட்சத்து 28 ஆயிரத்து 440 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 14 லட்சத்து 92 ஆயிரத்து 409 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.