வேளாண் சட்டங்களால் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
Sep 26 2020 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களால் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன்தராது என்றும், நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்றும், இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.