மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் - டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரியங்கா காந்தி மலரஞ்சலி
Oct 31 2020 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் திருமதி. பிரியங்கா காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவாக டெல்லியில் சக்தி ஸ்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திரா காந்தியின் 36-வது ஆண்டு நினைவு தினமான இன்று, அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். திருமதி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். திருமதி. இந்திரா காந்தியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, பொய்யிலிருந்து உண்மை வரை, இருளில் இருந்து வெளிச்சம் வரை, மரணத்திலிருந்து வாழ்வு வரை, வாழ்க்கையை வாழ்ந்து காட்டியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பிரதமர் திரு. மோதியும், ட்விட்டர் பதிவு மூலம் திருமதி. இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.