பெங்களூருவில் 77 முறை போக்குவரத்து விதிகளை மீறிய நபர் : 2 மீ. நீளத்துக்கு ரசீது - ரூ.42,000 அபராதம்
Oct 31 2020 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போக்குவரத்து விதிகளை மீறிய நபருக்கு, 2 மீட்டர் நீளத்துக்கு ரசீது வழங்கப்பட்டதுடன், 42 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பெங்களூரு மடிவாளா போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அருண்குமார் என்பவரது இருசக்கர வாகன எண்ணை ஆய்வு செய்தபோது, தலைக்கவசம் அணியாமல் பயணித்தது, சிக்னலை மதிக்காமல் கடந்தது, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது உட்பட 77 முறை விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக 2 மீட்டர் நீளத்திற்கு ரசீதை அருண்குமாரிடம் வழங்கிய போலீசார், 42 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டனர்.