புதுச்சேரியில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,013-ஆக உயர்வு
Oct 31 2020 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 13-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் மற்றும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 697ஆக உள்ளது. 30 ஆயிரத்து 724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.