டெல்லியில் மேலும் 3,944 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,324-ஆக உயர்வு
Dec 2 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 3 ஆயிரத்து 944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 78 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 82 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 342 ஆக உயர்ந்தது. டெல்லியில் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 680 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.