டெல்லிக்குள் யாரை அனுமதிப்பது என்பதை காவல்துறை முடிவு செய்யும் - விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
Jan 19 2021 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லிக்குள் யாரை அனுமதிப்பது என்பதை காவல் துறை முடிவு செய்வார்கள் என, விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 56 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதைத் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பதால், டெல்லிக்குள் யாரை அனுமதிப்பது என்பதை டெல்லி காவல் துறை முடிவு செய்ய வேண்டுமென தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.