சுந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் - ஆண்டுதோறும் கொண்டாட மத்திய அரசு முடிவு
Jan 19 2021 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய சுதந்திரப் பேராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள், வரும் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட வேண்டும் என பிரதமர் திரு. மோதி, பா.ஜ.க.-வினருக்கு திடீரென உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், "Parakram Diwas" என்ற பெயரில், பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் 3 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.