டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி நடைபெறவுள்ள ராணுவ அணிவகுப்பு - முதல்முறையாக Rafale போர் விமானமும் இடம்பெறுகிறது
Jan 19 2021 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில், முதல்முறையாக Rafale போர் விமானத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதியன்று, தலைநகர் டெல்லியில் மிகுந்த கோலாகலத்துடனும், எழுச்சியுடனும் நடைபெறுவது வழக்கம். நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் நிலையில், இந்த ஆண்டும் வழக்கம்போலவே குடியரசு தினம் வரும் 26-ந் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெறுகிறது. குடியரசு தின அணிவகுப்பில், இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், ராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுத்து அசத்தப்போகின்றன. இதில், முதல் முறையாக, Rafale போர் விமானம் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் Indranil Nandi தெரிவித்துள்ளார். Rafale போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்டிருப்பது நினைவு கூரத்தக்கது.