டெல்லியில் மீண்டும் அதிகரித்த கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செய்வோர் பாதிப்பு
Jan 20 2021 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இன்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக பனி மூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடும் குளிரும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இன்று காலையிலும் கடுமையான பனிமூட்டம் நிலவியது. சில அடி தொலைவே கண்ணுக்கு புலப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். வெப்ப நிலையும் 9.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால், குளிரும் மக்களை நடுங்கச் செய்தது. இதனால், பல இடங்களில் மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.