நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எதிரொலி - வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு
Jan 20 2021 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி நடைபெறும் என மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தக் கூட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2ம் கட்ட கூட்டம், மார்ச் மாதம் 8-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரையிலும் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார். காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள எம்.பி.,க்கள் அனைவரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.