நாட்டின் ராணுவ தகவலை பாதுகாப்பது சவாலான காரியம் - ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே தகவல்
Jan 24 2021 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தகவல் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ராணுவ தலைமை தளபதி திரு. முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவத் தலைமை தளபதி திரு முகுந்த் நரவனே, தற்போதைய காலகட்டத்தில், அரசு மற்றும் தனியார் துறையின் தகவல்கள் இணையதளத்தில் கிடைப்பதாகவும், இதை பயன்படுத்தி சைபர் கிரைம் தாக்குதல் நடத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் அரசு இயந்திரங்களையும் கையாள முடியும் என்றும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆயுதப் படைக்கு மட்டுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், நிதி, சுகாதாரம், உணவு, எரிசக்தி, சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் அது உள்ளடக்கியது என்றும், தற்போது, துல்லியமான தாக்குதல் நடத்த உலகில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் திரு. முகுந்த் நரவனே கூறினார்.