தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு - டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அட்டவணையை வெளியிடுகிறார்
Feb 26 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய டெல்லியில் நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவமும் வந்துள்ளது. இந்நிலையில், 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் மாலை 4.30 மணியளவில், தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளார்.