ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் சைக்கிள் பயணம் : பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
Feb 26 2021 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ், பீகாரில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாயை தாண்டியுள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ், இன்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார். தனது இல்லத்திலிருந்து, பாட்னாவில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு அவர் சைக்கிளில் சென்றார். பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, நேற்று மின்சார ஸ்கூட்டரில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.