விவசாயத்துறையை தனியார்மயமாக்குவதற்கான தருணம் வந்துவிட்டது - பிரதமர் மோடி பகிரங்க அறிவிப்பு
Mar 1 2021 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண்துறையில் தனியார் பங்களிப்பிற்கான தருணம் வந்துவிட்டதாக பிரதமர் திரு.நேரந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வேளாண்துறையை மேம்படுத்துவது தொடர்பாக காணொலியில் அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர் திரு. நரந்திரமோடி, நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளின் கடன் தொகைக்கான இலக்கு 16.5. லட்சம் கோடி ரூபாய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அறுவடைக்கு பிறகு வேளாண் பொருள்களை பாதுகாப்பதற்கும் பதப்படுத்துவதற்குமான தொழில்நுட்பங்களை மேம்மபடுத்த வேண்டும் என தெரிவித்தார். இதற்காக 21- ஆம் நூற்றாண்டில், மிகப்பெரிய புரட்சி தேவைப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, வேளாண்துறையில் தனியார் பங்களிப்பிற்கான தருணம் வந்துவிட்டதாகவும் கூறினார்.