புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது இடதுசாரிகள் குற்றச்சாட்டு
Mar 5 2021 8:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் தனது அலுவலகமாக பயன்படுத்துவது மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் திரு. சலீம், புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் மிகப்பெரிய வியாபார அரசியலாக மாறி இருப்பதாக தெரிவித்தார்.