புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
Mar 6 2021 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 559ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையமும் மூன்றாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டையில் அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தாகூர் கலைக்கல்லூரி ஆகிய மூன்று இடங்களில், மாவட்ட ஆட்சியர் திரு.பூர்வாகார்க் தலைமையில் தேர்தல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.