இந்தியா - பிரிட்டன் இடையே விமான சேவை ரத்து - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
Apr 21 2021 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்நியா, பிரிட்டன் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இயக்கப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் அந்நாட்டு அரசு இந்தியாவையும் சேர்த்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில், இந்நியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களும், பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இயக்கப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், விமான பயணச்சீட்டுக்கான கட்டணங்களை திரும்ப தருவது உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.