புதுச்சேரியில் அரசின் பால் விற்பனையகங்கள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம், சானிடைசர் விற்பனை
Apr 21 2021 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் அரசின் பால் விற்பனையகங்கள் மூலம், குறைந்த விலைக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் விற்பனை செய்யும் திட்டத்தை, அம்மாநில துணைநிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திருமதி.தமிழிசை சவுந்தர்ராஜன், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை சானிடைசரால் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.