நாட்டில் தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமர் மோடியும் காணவில்லை - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம்
May 14 2021 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடியும் காணாமல் போய்விட்டதாக காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பாராளுமன்ற புதிய கட்டிடம், பிரதமருக்கான புதிய இல்லம் போன்ற கட்டுமான பணிகள் அடங்கிய சென்டில் விஸ்டா திட்டம், தடுப்பூசிகள், கொரோனா மருந்துகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஆகியவற்றில் மத்திய அரசை அவர் சாடி வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டதாகவும், சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. அங்கும், இங்குமாக பிரதமரின் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே மிச்சம் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.