நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்
May 14 2021 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் மோடி, மே 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில், நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இரு தவணையாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் மே 18ம் தேதி, 9 மாநிலங்களில் 46 மாவட்ட ஆட்சியர்களுடனும், மே 20ம் தேதி 10 மாநிலங்களிள் உள்ள 54 மாவட்ட ஆட்சியர்களுடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சம்மந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.