அசாம் - மிசோரம் எல்லையில் நீடிக்கும் பதற்றம் - அசாம் முதலமைச்சர் மீது கொலை முயற்சி, சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு
Jul 31 2021 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம், மிசோரம் எல்லை பிரச்சனையால் ஏற்பட்ட மோதலையடுத்து, அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா சர்மா மீது மிசோரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பிரச்சனையில் இரு மாநில காவல் துறையினருக்கு இடையே கடந்த 26-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் அசாம் காவல்துறையினர் 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் இருமாநில காவல்துறையினர் வாபஸ் பெறப்பட்டு துணை ராணுவப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொலை முயற்சி, சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா சர்மா மீது மிசோரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, மிசோரம் போலீசார்தான் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்த புகரை மிசோரம் முதலமைச்சர் திரு. ஜோரங்தாங்கா மறுத்துள்ளார்.