உத்தரபிரதேச மாநிலத்தில் இடைவிடாத கனமழையால் வெள்ளம் : மூழ்கிய லக்னோ நகரம்
Sep 16 2021 8:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில், Lucknow, Kanpur, Barabanki, Saharanpur, Moradabad, Sambhal, Bijnor, Amroha, Sultanpur உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. லக்னோ நகரில், இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரில், குழந்தைகள் நீச்சல் அடித்த விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.