சிறந்த சாலை தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
Sep 17 2021 8:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் சிறந்த சாலை தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என்றார்.
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை நேற்று ஆய்வு செய்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடும்ப நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அதற்கான செலவை பொறுத்தே, அந்நிகழ்ச்சியின் தன்மை இருக்கும் என குறிப்பிட்டார். அதைப் போலவேதான், சிறந்த சாலைக்கான கட்டமைப்பு வேண்டுமென்றால், அதற்காக பொதுமக்கள் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தியே ஆக வேண்டும் என தெரிவித்தார். விரைவுச்சாலை பயண நேரத்தை கணிசமாக குறைக்கும்,இதனால் எரிபொருள் செலவு குறையும். டில்லி - மும்பை விரைவுச் சாலை பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். ஒரு லாரி டில்லியில் இருந்து மும்பையை அடைய 48 மணி நேரம் ஆகும். ஆனால் விரைவுச் சாலையில், அது 18 மணிநேரம் மட்டுமே ஆகும் என அவர் கூறினார்.