மும்பையில் மேம்பாலத்தின் கட்டுமானம் இடிந்து விபத்து - லேசான காயங்களுடன் 13 பேர் உயிர் தப்பினர்
Sep 17 2021 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவிவ்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில், BKC சாலையையும், சாண்டா குரூஸ் செம்புர் பகுதியையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் கட்டுமானம் நடைபெற்றுவந்த இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்த மண்டலத்தின் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.