கேரளாவில் 11ம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி - கேரள அரசின் விளக்கத்தை ஏற்று நடவடிக்கை
Sep 17 2021 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் 11-ம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா 2-வது அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இருந்தபோதிலும், 11-ம் வகுப்புக்கான தேர்வுகளை நேரடியாக நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசூல்கான் என்ற வழக்கறிஞர், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கேரளாவில் 11-ம் வகுப்பு தேர்வை நேரடியாக நடத்த இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று கேரள அரசு உறுதி அளித்தது. இதையடுத்து, கேரளாவில் 11-ம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.