தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளதால், மதுபானம் அருந்துவோருக்கு பெரும் சந்தேகம்
Sep 17 2021 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெளியான தகவல், பலரையும் அதிர்ச்சிக்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. டாஸ்மாக் விற்பனை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், 2010-11-ம் ஆண்டுகளில் 3 கோடியே 56 லட்சம் ரூபாயும், 2011-12-ம் ஆண்டுகளில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாயும், 2012-13-ம் ஆண்டுகளில் 103 கோடியே 64 லட்சம் ரூபாயும், 2013-14-ம் ஆண்டுகளில் 64 கோடியே 40 லட்சம் ரூபாயும், 2019-20-ம் ஆண்டுகளில் 64 கோடியே 44 லட்சம் ரூபாயும் நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.