இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல் - கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு வலியுறுத்தல்
Oct 27 2021 8:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கோரியுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி விண்ணப்பித்தது. எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் தரவுகளை வழங்க வேண்டும் என நிபுணர் குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து இறுதி மதிப்பீடு செய்வதற்காக, வரும் நவம்பர் 3 ஆம் தேதி நிபுணர் குழு கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.