இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஒரே நாளில் 585 பேர் கொரோனாவுக்கு பலி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
Oct 27 2021 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் போதிலும், தொற்றுக்கு உயிரழப்போர் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. ஒரே நாளில் 585 பேர் கொரோனாவுக்கு பலியானதா மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 451 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 653-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 55 ஆயிரத்து 653-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 661 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 339 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 14 ஆயிரத்து 21 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 103 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 577 டோஸ், கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.