குடியரசு விழாவில் ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு அழைப்பு
Jan 20 2022 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் முதன்முறையாக குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு.மோடியின் உத்தரவுப்படியே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின விழாவில் பங்கேற்க 8 ஆயிரம் பார்வையாளர்ளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவில்லை என்றும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.