நாட்டிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாக புகார் : பாகிஸ்தானின் 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
Jan 21 2022 6:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாக பாகிஸ்தான் நாட்டின் 35 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்திய நாட்டின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர் பிரச்னை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தவறான தகவல்களை, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் யூ டியூப் சானல்கள் பரப்பி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 35 யூடியூப் சானல்கள், 2 இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றுடன் 2 இணைய தளங்களையும் முடக்கியுள்ளதாக அத்துறையின் கூடுதல் செயலாளர் திரு. விக்ரம் சாகே, தெரிவித்துள்ளார். இதேப்போல கடந்த கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டின் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.