டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா : தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகுவதாக விளக்கம்
May 18 2022 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநராக திரு. அனில் பைஜால், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். பதவிக்காலங்களில் அவர் டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பல பிரச்னைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் அவரின் ஐந்தாண்டு பதவிகாலம் முடிவடைந்தது. ஆனால் டெல்லி துணை நிலை ஆளுநர் பதவிக்கு ஒரு நிலையான பதவிக் காலம் இல்லை என்பதால், புதிதாக வேறு ஒருவர் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பதவியை திரு. அனில் பைஜால் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ள அனில் பைஜால், ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.