இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரு நாள் தொற்று 2 ஆயிரத்தை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்
May 25 2022 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 192-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 507-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 14 ஆயிரத்து 971 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 2 ஆயிரத்து 714 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 977 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 192 கோடியே 67 லட்சத்து 44 ஆயிரத்து 769 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.