கார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு புகார் - வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை

May 25 2022 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனர்களுக்‍கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்‍கில் காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்‍கத்துறை வழக்‍குப்பதிவு செய்துள்ளது.

சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 17-ம் தேதி, அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில், சிபிஐ-யை தொடர்ந்து, விசா முறைகேடு வழக்‍கில் திரு. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்‍கத்துறையும் இன்று வழக்‍குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்‍கு தொடர்பாக திரு. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் திரு. பாஸ்கரராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00