கார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு புகார் - வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை
May 25 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 17-ம் தேதி, அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில், சிபிஐ-யை தொடர்ந்து, விசா முறைகேடு வழக்கில் திரு. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக திரு. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் திரு. பாஸ்கரராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.