புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு : சிவப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி மாணவர்களுக்கு வரவேற்பு

Jun 23 2022 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை, சிவப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி, ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, புதுச்சேரியில் முழு நேரமாக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்றும், நாளையும் அரைநாள் மட்டுமே செயல்படுமென, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. லாஸ்பேட்டையில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு வந்த மாணவர்களை, சிவப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி, பலூன் வழங்கி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுநேர வகுப்புகளில் படிக்க இருப்பதாகவும், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகளில் நண்பர்களை சந்திப்பதாகவும், மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

காரைக்காலில், கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு, இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் பாடங்கள் பயின்ற நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகளில் பங்கேற்பதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00