அனைத்து மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையம் -தமிழிசை சௌந்தர்ராஜன்
Jun 23 2022 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென, துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தர்ராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற, காவல்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்கரை சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு ஓட்டம், ஆம்பூர் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 கோடிக்கும் மேற்பட்டோர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இது தடைக்கல்லாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.