அசாமில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைது
Jun 23 2022 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாமில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்ப்பதில் மத்திய பாஜக அரசு மும்முரமாக இருப்பதாகவும் அவர்களுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹோமந்தா பிஸ்வா சர்மா உதவி வருவதாக குற்றம்சாட்டி அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுகாத்தியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன், திரிணாமுல் மாநில தலைவர் ரிபுன் போரா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.