பத்ராசால் திட்டமோசடி தொடர்பான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை காவல் ஆக.8 வரை நீட்டிப்பு

Aug 4 2022 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடிசை சீரமைப்பு திட்டத்தில் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து மொசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி. திரு.சஞ்சய் ராவத்தின் அமலாக்கத்துறை காவல் வரும் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை கோரகாவ் பகுதி பத்ராசால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ஆயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பிலான நிலமோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடையதாக கருதப்படும் சிவசேனா எம்.பி. திரு. சஞ்சய் ராவத் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்பு அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் திரு. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 4-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திரு. சஞ்சய் ராவத் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் மீதான காவல் விசாரணை நாட்களை வரும் 8-ம் தேதி வரை நீட்டித்து அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00