மும்பையில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - வேதியியல் முதுநிலை பட்டதாரி உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Aug 5 2022 8:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான தடைச் செய்யப்பட்ட போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வேதியியல் பட்டதாரி இளைஞர் உள்பட 5 பேரை போதை தடுப்புப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மும்பை அடுத்த பல்ஹர் மாவட்டத்தில் உள்ள நலசோபரா பகுதியில் செயல்பட்டு வரும் மருத்து உற்பத்தி தொழிற்சாலையில் தடைச் செய்யப்பட்ட போதை பொருட்கள் தயாரிக்கப்படுவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற மும்பை போதை தடுப்புப்பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், மெபெட்ரோன் எனப்படும் தடைச் செய்யப்பட்ட போதை மருந்துகள் தயாரிக்கப்பட்டது உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, 700 கிலோ எடையிலான மெபெட்ரோன் போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.