மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை : ராகுல் காந்தி கடும் விமர்சனம்
Aug 5 2022 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை என்று திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் போராட்டத்தின் போது செய்தியளார்களிடம் பேசிய திரு. ராகுல் காந்தி, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதாக தெரிவித்தார். அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டதாகவும், மக்கள் படும் இன்னல்கள் பற்றி மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை என்றும் கூறினார். திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை என்றும், அவர் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்படுகிறார் என்றும் விமர்சித்தார். ஜெர்மனியின் அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் மட்டுமே ஹிட்லர் அனைத்து தேர்தல்களிலும் வென்றதாக தெரிவித்த திரு. ராகுல் காந்தி, அதேதான் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்ததாக கூறினார்.