நேபாளத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவு
Aug 6 2022 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5 புள்ளி 3-ஆக பதிவானதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், சில பகுதிகளில் வீடுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.