கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தல்
Aug 10 2022 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து பெரியாறு ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடைவிடாது பெய்யும் பலத்த மழையால் ஆற்றின் இரு கரைகளையும் மூழ்கடித்து செல்லும் வெள்ளம், ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவிலையும் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் ஒடிஷா கடற்கரை அருகே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பலத்த காற்றுடன், அலைகள் வேகமாக எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.