நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை
Sep 22 2022 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளா, தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றது. இதில், பல்வேறு நிர்வாகிகளின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.